காணொளி காண வழி இல்லை
விழியிலும் ஒளி விழவில்லை
வானொலி கேட்டு வாழ்கின்றோம்
ஒலி வழி ஒளியை உணர்கின்றோம்.
முகம் பூசிய முகப் பொடியும்
அளவு தெரியா அளவில்
பூசிக்கொள்வோம்.
கைவீசி நடக்காமல் -கையோடு
குச்சி வீசி நடையிடுவோம்.
துணையும் தினம் துணையிருப்பாள்
எனையும் தினம் பிரிந்திருப்பாள்
ரயில் சப்தம் மேள ஒளி
அதில் புல்லாங்குழலோ தனி ஒலி.
ஒலி ஒன்றே உகமென்று
இருள் உள்ளே வெளிச்சம் தேடும்
கருவறை கருவோ நாங்கள்.
No comments:
Post a Comment