கூடு சிறிதானால்
Saturday, January 8, 2022
சிறு கவிதை துண்டுகள் - Kavithai
தமிழ் கவிதை - Tamizh Kavithai
காணொளி காண வழி இல்லை
Friday, November 5, 2021
Priyanka Chopra posts pics of LA home decked up for Diwali, gets her and Nick Jonas' wedding outfits framed
Priyanka Chopra and Nick Jonas celebrated their first Diwali at their new home in Los Angeles and made sure it was a night to remember.
Priyanka has now shared inside pictures of her house along with a note to all who attended the Diwali bash thrown by her and Nick at their residence.
Priyanka is seen in an ivory lehenga while Nick is in a red kurta-pyjama as they pose for pictures around the house. The first pic shows Priyanka sitting on a swing at their patio, with Nick standing besides her. The second pic shows Priyanka sitting on their staircase and the third shows her posing at their main door. The most special pic is of the couple posing in a corner with a portait of their wedding dupattas framed on the wall. The post also includes the video of the couple dancing in the open area besides the pool. +
Sharing the pictures, Priyanka wrote, 'Our first Diwali in our first home together. This one will always be special.' She went on to thank everyone who worked hard to make the evening special and said, 'You're my angels.'
Thanking the guests and Nick, she further wrote, "To everyone who honoured our home and my culture by not only dressing the part but dancing the night away, you made me feel like I was back home. And to the best husband and partner @nickjonas. You are what dreams are made of. I love you. My heart is so grateful and full. Happy Diwali."
Inside Nick Jonas-Priyanka Chopra's Diwali bash: Couple's LA home lights up with fireworks, Joe Jonas joins celebrations
Singer John Legend with wife Chrissy Teigen, Mindy Kaling were among the guests who attended the Diwali bash on Thursday. As per the theme of the night, Chrissy was in a blue lehenga while John Legend was in a sherwani. Mindy also wore a lehenga for the do.
For HT: Sign on to read the HT ePaper epaper.hindustantimes.com
ஒற்றை பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை.. நவம்பர் 30 தான் கடைசி தேதி..!!!!
ஒற்றை பெண் குழந்தையை திட்டத்தின் கீழ் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது மத்திய அரசு. இந்திராகாந்தி ஒற்றை பெண் குழந்தை திட்டம் உள்ளது. ஒற்றை பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள செய்தியில்,முழுநேர முதுகலைப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நடப்பு கல்வி ஆண்டில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் இந்திராகாந்தி ஒற்றை பெண் குழந்தைக்கான மேற்படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 30 வயது வரையிலான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு மற்றும் விடுதி கட்டணம் ஆகியவை வழங்கப்படாது. கல்வி உதவித் தொகை மட்டுமே வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.3,100 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாணவர்கள் scholarships.gov.inஎன்ற இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம் பட சர்ச்சை.. உண்மையை மறைத்து, வன்மத்தை வளர்த்த திரைபடக்குழு.. யார் இந்த கோவிந்தன்?..! விபரம் உள்ளே..!!
ராஜாக்கண்ணு கொலை வழக்கு தொடர்பான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட முதனை ஊரை சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கோவிந்தன் பெரும் உதவியாக இருந்து வழக்கை நடத்தினார்.
இயக்குனர் டி.ஜெ ஞானவேல், நடிகர் சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் கடந்த 1993 ஆம் வருடம் விழுப்புரம் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் வழக்கு விசாரணையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், படத்தில் காண்பிக்கப்பட்டது இருளர் இன மக்களின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும், அதில் பல திரித்து கூறப்பட்டுள்ளதும், வன்மத்துடன் செய்யப்பட்ட செயல்களும் பெரும் விவாதம் மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காவல் துறையினரால் கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு கொலை வழக்கு தொடர்பான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட முதனை ஊரை சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கோவிந்தன் என்பவர் பெரும் உதவியாக இருந்த நிலையில், அவர் வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வரும் வரை திருமணமும் செய்துகொள்ளாமல் இருந்துள்ளார். இந்த படம் குறித்த உண்மை காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், "கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை கிராமத்தை சார்ந்தவர் கோவிந்தன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த 1983 ஆம் வருடத்தில் இருந்து பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், ஊராட்சி மன்ற தலைவராக 2011 - 2016 வரை இடம்பெற்றுள்ளார். இராஜாக்கண்ணு கொலை சம்பவம் 1993 மார்ச் மாதத்தில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சமூகம் ஆதிவாசி மக்கள் என்று சொல்லகூறிய, குறவர் இனத்தை சார்ந்த பண்டைய குறும்பர் என்ற பிரிவை சார்ந்தவர்கள். இவர்கள் முதனை ஊரிலேயே வசித்து வந்துள்ளனர்.
வழக்கில் உண்மையாக சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். வழக்கு ஆரம்பித்து 13 வருடம் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது 26 தான். எனக்கு அது திருமணம் செய்யும் வயது என்றாலும், வழக்கை எடுத்து நடத்தியதால் ஆளுங்கட்சி, காவல்துறை, ரௌடிகள் என பலதரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்தது. லாரி ஏற்றி கொலை செய்திடுவோம் என்று மிரட்டினார்கள். பணம் கொடுப்பதாக தெரிவித்தார்கள்.
எனது கட்சியின் அன்றைய மாவட்ட செயலாளர், இன்றைய பொதுச்செயலர் கே. பாலகிருஷ்ணனிடம் இதனை தெரிவித்த நிலையில், அவர்களும் வழக்கை தொடர்ந்து நடத்தலாம், ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து, வழக்கை ஏற்றுக்கொண்டு நடத்தும் காலத்தில், மனைவி என்ற பந்தத்தின் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல் வரும். மனைவியை மிரட்டி வழக்கை திருப்ப பெற வைப்பார்கள் என்பதால், திருமணம் செய்துகொள்ளவில்லை. வழக்கின் நீதித்தன்மையை பாதிக்கக்கூடாது என்பதால் திருமணம் செய்யவில்லை.
போராட்டத்தில் அன்றைய காலத்தில் குறவர் மக்களுக்கு உறுதுணையாக இருந்தது வன்னியர்கள் தான். ஒருவர் பிள்ளை சமூகத்தை சார்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்களுக்கு உதவி செய்தோம். நாங்கள் ஜாதி பார்த்து நீதி கேட்டு போராடவில்லை" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் இருந்த படத்தின் உண்மைத்தன்மை பொய்த்து, உண்மையில் நடந்தது வேறு, திரையில் காண்பிக்கப்பட்டுள்ளது வேறு என்பது. வியாபார நோக்கத்துக்காக செயல்படும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது.
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
தளபதியின் முதல்நாள் வசூலை தட்டி தூக்கிய அண்ணாத்த.. அடேங்கப்பா கபாலிக்கு பின் செய்த சாதனை
என்னதான் படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக முதல் நாளில் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
இந்த வரிசையில் தற்போது அண்ணாத்த முதல் இடத்தை பிடித்துள்ளது. அதாவது முதலிடத்தில் இருந்த தளபதி விஜயின் சர்க்கார் படத்தை தாண்டி விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அண்ணாத்த: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். நேற்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் அண்ணாத்த படம் வெளியானது. கொரானா வைரஸ் பரவலுக்கு பிறகு மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படம் மற்றும் தீபாவளி அன்று வெளியானதால் மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. நேர் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற அண்ணாத்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் கிட்டத்தட்ட 34 கோடி வசூல் செய்து தளபதி விஜய்யின் படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
சர்கார்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2018 இல் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்கார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. பின்பு வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் 32 கோடி வசூலை ஈட்டியது. அப்போது பாக்ஸ் ஆபீஸ் கிங்கான சூப்பர் ஸ்டாரின் காலா படத்தை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது. இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வசூல் வேட்டையாடியது சர்க்கார் திரைப்படம்.
மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் 2021 ல் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. விஜயின் படங்கள் தமிழ் மொழியில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். இப்படம் வெளியிடும்போது கொரோனா காலகட்டம் என்பதால் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டது. இதனால் அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிந்தன. மாஸ்டர் திரைப்படம் வெளியான முதல் நாளில் 26 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்தது.
பிகில்: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2019 தீபாவளி அன்று வெளியான திரைப்படம் பிகில். இப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். தமிழ்நாட்டில் மட்டும் பிகில் திரைப்படம் வெளியான முதல் நாளே 26 கோடி வசூல் செய்தது. 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிகில் திரைப்படம் வெளியான 4 நாட்களில் 152 கோடி வசூல் செய்திருந்தது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதிக வசூல் செய்துள்ள திரைப்படம் என்ற பெயரை பிகில் திரைப்படம் பெற்றுள்ளது.
மெர்சல்: தெறி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், கோவை சரளா என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை தொடர்ந்து வந்தாலும் படம் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து சாதனை படைத்தது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சில கட்சிகளின் எதிர்ப்பலை படத்திற்கு சாதகமாக அமைந்து வசூலில் வேட்டையாடியது. இப்படம் வெளியிட்ட முதல் நாளே 23 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது.
கபாலி: பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2016-ல் வெளியான திரைப்படம் கபாலி. படத்தில் ராதிகா ஆப்தே, ஜான் விஜய், ரித்திகா, தன்ஷிகா என பலர் நடித்திருந்தார்கள். இப்படம் மலேசியாவில் உள்ள ஒரு தாதாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கபாலி திரைப்படம் முதல் நாளே 21.5 கோடி வசூல் பெற்று பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube -ல் Subscribe பண்ணுங்க.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
வேலூா், கடலூா், திருவாரூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடரும் கன மழையால் மேற்கண்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பலத்த சூறைக் காற்றுடன் தொடா்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை காரணமாக முக்கிய சாலைகளில் மழை வெள்ள நீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை தொடா்ந்து மழை பெய்தநிலையில் ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 4 சென்டி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
Gold Price in India
Gold Price in India Gold has over the years been a perfect hedge against inflation. Investors are increasingly looking at gold as an impor...
-
கூடு சிறிதானால் வானம் பெரிதே! பறக்கத் தெரிந்துவிட்டால் மண்ணில்.. நடப்பதற்கான நேரம் சிறிதே! சிலையாகிப் போனாலும் வன்மத்தின் எதிர்ப்பு வி...
-
Priyanka Chopra and Nick Jonas celebrated their first Diwali at their new home in Los Angeles and made sure it was a night to remember. Priy...
-
வேலூா், கடலூா், திருவாரூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடரும...